15-08-2026
Kallakurichi
Event

இந்திய நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவ, மாணவியர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட கள்ளக்குறிச்சிக் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் (Convenor) ஆகியோர் உடனிருந்தனர்.



