03-02-2026
Kallakurichi
Event

கள்ளககுறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (3.2.2026) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கலாபவன் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட வைஸ் சேர்மன் இளையபெருமாள், மாவட்ட செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் டாக்டர் பொன்னரசு கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணம் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தடுப்பு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் உட்பட 500 மேற்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.








