07-08-2026
Melur
Event

உலக தாய்ப்பால் வார விழா – 2026 🍼
ஆகஸ்ட் 7, 2026 – மேலூர் ஆரம்ப சுகாதார நிலையம்
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, மேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் Dr. S. Ponnarasu MD அவர்கள், கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான சந்தேகங்கள், தவறான நம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள் (Myths & Misconceptions) குறித்து விளக்கமாக எடுத்துரைத்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் சரியான தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திரு. Emmanuel Sasi Kumar, மாவட்டத் துணைத் தலைவர் திரு. Elayaperumal, வட்டார மருத்துவ அலுவலர் Dr. BalaDhandayuthapani, துறை சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் நிறைவாக, பங்கேற்ற தாய்மார்களுக்கு அன்பின் அடையாளமாக சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
“தாய்ப்பால் – குழந்தையின் முதல் தடுப்பூசி; தாயின் அன்பின் முதல் பரிசு!” ❤️
#WorldBreastfeedingWeek #BreastfeedingWeek2026 #தாய்ப்பால் #தாய்ப்பால்வாரவிழா #மேலூர்PHC #MaternalHealth #ChildHealth #CommunityHealth

